logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
உங்கள் அன்பானவர்களுடன் பகிர இனிய இரவு வணக்கங்கள்!

உங்கள் அன்பானவர்களுடன் பகிர இனிய இரவு வணக்கங்கள்!

ஓடி ஓடி களைத்த கால்களும், அசராது உழைத்த உடலும், இமைக்காது சோர்ந்த விழிகளும், எதிர் காலத்தை என்னி என்னி ஓய்வில்லா திட்டமிட்ட உள்ளமும், சிறிது நேரம் அசர துடிக்கும் ஆன்மாவும், சற்றே தலை சாய காத்திருக்கும் அந்தி பொழுது இளம் தென்றலோடு வருடும் இந்த இரவு நேரத்தில், உங்கள் அன்பையும், நல்லெண்ணங்களையும் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகின்றீர்களா? உங்கள் இரவு வணக்கங்களை தெரிவிக்க பல அழகான மற்றும் சுவாரசியமான பொன்மொழிகளும், கவிதைகளும், இங்கே வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது. இவை நிச்சயம் உங்கள் அன்பையும், காதலையும் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அழகிய நிலவும், ரம்மியமான தென்றலும், சில்வண்டுகளில் சத்தமும், மிதமான காற்றுக்கு நடனம் ஆடுவது போல உரசும் மரக் கிளைகளும், இலைகளும், இந்த இரவு பொழுதை அழகாக்க, மேலும் உங்களுக்காக இங்கே சில இரவு வணக்கங்களின் தொகுப்பு தொடர்ந்து படியுங்கள்!

இரவு வணக்கம்(Good night Messages)

1. உலகின் நிலவு ஆகாயத்தில் மின்னுகிறது,
என் இதயத்தின் நிலவு இங்கே பூமியில் மின்னிகொண்டிருக்கிறது,
குளிர்ச்சியான இரவை கொள்வாயாக!
இனிய இரவு வணக்கம்!

2. வானில் இருக்க கூடிய நட்சத்திரங்களும், நிலவும் உன்னை கண்டு பொறாமை கொள்ளும்,
அவர்களுடைய அழகை நீ திருடிகொண்டதற்காக,
இனிய கனவுகளுடன் கொண்ட இரவை பெறுவாயாக!
இனிய இரவு வணக்கம்!

3. தேவதைகள் ஒன்று கூடி உன்னை தூங்க செய்யட்டும்,
நீ என்னுடைய மிகச்சிறந்த நண்பன்,
இனிய கனவுகளுடன் உறங்குவாயாக!
இனிய இரவு வணக்கம்!

ADVERTISEMENT

4. நாம் ஓய்வெடுப்பதர்காக க டவுள் நமக்காக கொடுத்திருக்கும் சிறந்ததொரு பொழுது தான் இரவு,
கண்ணே நீ இந்த இனிய இரவில் நன்கு ஓய்வெடு,
இனிய இரவு வாழ்த்துக்கள்!
இனிய இரவு வணக்கம்!

5. நீ இனிய இரவுகளை பெற என் இனிய வாழ்த்துகளை அனுப்புகிறேன்,
இனிய இரவு வாழ்த்துக்கள்!

6. நமது மனது ஓய்வெடுக்க நல்லதொரு நேரம் இரவு,
நம் கண்கள் கனவுகள் காண அமைதியான நேரம் இரவு,
அழகிய இரவு வாழ்த்துக்கள்!

7. இயற்கையோடு சேர்ந்து நான் உனக்கு
என் இனிய இரவு வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்!

ADVERTISEMENT

8. நீ இனிய இரவு கொள்ள இதோ எனது என் நெருக்கமான அணைப்புகளுடன் சேர்த்து உனக்கு இனிக்கும் முத்தங்களையும் அனுப்புகிறேன்!
இனிய இரவு வணக்கம்!

9. எல்லா உயிரினங்களும் உறங்குகின்றன,
இயற்கையும் ஓய்வெடுத்துகொண்டது,
என் அன்பே நீயும் விரைவாக உறக்கம் கொள்வாயாக!
இனிய இரவு வணக்கம்!

10. உன் அணைப்புகளுடன் என் இரவுகளை களிக்க விரும்புகிறேன்,
உன் இனிய முத்தங்களுடன் என் கனவை காண விரும்புகிறேன்

காலை வணக்கம் செய்திகளின் மேற்கோள்களையும் படியுங்கள்

ADVERTISEMENT

வாட்ஸ் ஆப் இரவு வணக்கங்கள்(Good night Messages For Whatsapp / SMS)

1. இனிய இரவு வணக்கம்
எதையும் சிந்தித்து
செய்தால் நமக்கு
கிடைப்பது வெற்றி..!
எதையும் செய்துவிட்டு
சிந்தித்தால் நமக்கு
கிடைப்பது அனுபவம்..!

2. இரவு வணக்கம்
தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டும்
துக்கம் உங்களை விட்டு.. தொலைவினில் தொலையட்டும் – இந்த இரவில்

3. ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்
ஒரு எதிர் பார்ப்பு!
ஆனால் ஒரு நாளின் முடிவிலும்
ஒரு அனுபவம்..!
இதுதான் வாழ்க்கை
இனிய இரவு வணக்கம்!

4. ஒரு நாள் உனக்கு
பிடிச்ச மாதிரி
உன் வாழ்க்கை மாறும்..
அது நாளைய கூட இருக்கலாம்
இனிய இரவு வணக்கம்

ADVERTISEMENT

5. உறங்குகின்ற விழிகளுக்குள்
உறங்காத நினைவுகள் நடத்தும்
ஒளி காட்சி கனவு
இரவு வணக்கம்!

6. விடியும் என்று விண்ணை நம்பு..
முடியும் என்று உன்னை நம்பு..
இனிய இரவு வணக்கம்

7. பகல் முழுவதும் இமைத்து இமைத்து
களைத்து போன இமைகளுக்கும்
சிறிது ஓய்வு கொடுப்போம்
இனிய இரவு வணக்கம்

8. வாழ வைப்பவன் இறைவன் வாழ தெரிந்தவன் மனிதன் விழ வைப்பவன் துரோகி தூக்கி விடுபவன் நண்பன்
இரவு வணக்கம்!

ADVERTISEMENT

9. போலியாக பேசுவது பிடிக்காது பொய்யாக பேசுவதும் பிடிக்காது நான் நானாக இருப்பதால் என்னவோ என்னை பலருக்கு பிடிக்காது
இனிய இரவு வணக்கம்!

10. இமை மூடி உறங்கும் பொழுதும் கதிர் ஒலிகள் கண்கள் கூசும் மனம் மூடி வாழ முயன்றும் சிலர் நினைவுகள் வாசம் வீசும்
இனிய இரவு வணக்கம்!

சகோதரிகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் படியுங்கள்

ADVERTISEMENT

pixabay

இரம்மியமான இரவு வணக்கங்கள்(Beautiful Good Night Messages)

1. இரவின் மடியில்
நிலவின் ஒளியில்
ஓரைகள் மின்ன
இமைகளும் பின்ன
திக்கெட்டும் உறைய
மின்னொளிகள் மறைய
இனிதான கனவுகள் தேடி
இளைப்பாக உறங்கும் தங்களுக்கு
என் தாலாட்டும் இரவு வணக்கங்கள்.

2. இரவின் மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்
உங்கள் மனதும் உறங்கட்டும்
காலையில் புன்கையுடன் மலர
என் இனிய இரவு வணக்கம்.

3. வீழும் நட்சத்திரங்களாய் இன்றி
வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே.
நல் இரவு வணக்கம்

ADVERTISEMENT

4. விழிகள் உறங்க அழைத்தாலும்
மனங்கள் உறங்க மறுக்கிறதே
இமைகள் மூடிக்கிடந்தாலும்
இதயம் மூடமறுக்கிறதே!
நாளைய வேலைகள் கிடக்கிறதே!
மீண்டும் நாளை சந்திப்போம்!
அதுவரை உடல்கள்
சாயட்டும் படுக்கையில்..
நேசித்த நினைவுகள்
மனதில் ஓடட்டும் விடியும் வரையில்.

5. இரவென்னும் கவிதையில்
நிலவும் ☆ நட்சத்திரங்களும்
தேன் சுவை சந்தங்கள்
கவிதையின் பரிசாக இமைகளை தழுவும்
இனிய உறக்கம்
இதமான கனவுகளுடன்
இரவு வணக்கம்

6. விடியும் என்றிருப்போருக்கு…
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு…
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!
நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!
இனிய இரவு வணக்கம்..!!

7. நிலவு விண்ணை தொடும் நேரத்தில்…!
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் இனிய வேளையில்…!
தூக்கம் உங்கள் கண்களை தழுவும் முன்…!
என் இனிய இரவு வணக்கம்…!

ADVERTISEMENT

8. பகலுக்கு பாய் சொல்லி…
இரவுக்கு ஹாய் சொல்லி…
தூக்கத்திற்கு வெல்கம் சொல்லி..
கனவு என்னும் மலர் பறிக்க
போகும் உங்களுக்கு இரவு வணக்கம்…!

9. என்றோ ஒரு நாள் நிரந்தரமாக உறங்குவதற்காக நாம் அன்றாடம் எடுக்கும் பயிற்சி தான் தூக்கம், அதன் முதலும் முடிவும் நம்மில் யார்க்கும் தெரியாது…
இனிய இரவு வணக்கம்..!!

10. கவிதைகள் ஊற்றெடுக்கும் இரவில்
முழுமதியே கவிதைகளாய் மாற
தேன் சுவை சிந்தும் நட்சத்திரங்கள்
கவிதைக்கு பரிசாக கிடைத்த
முத்துக்களாக கண்சிமிட்ட
கனவுலகத்தில் கலந்துவிட
உறங்குங்கள் சுகமாக!
இனிய இரவு வணக்கங்கள்!

11. நிலையில்லா உலகின்
நிலையில்லா உறவுகளால்
நிறைவில்லா உள்ளமது
நிலையற்று போக அதை
நிலைநிறுத்தி நன்
நினைவதை தந்த
நிகரில்லா நாளிது
நித்திரைக்குச் செல்ல
நர்கனவுடன் நீ இன்று
நித்திரைக்குச் செல்ல
நள்ளிரவு வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

காதல் நிறைந்த இரவு வணக்கம்(Romantic Good Night Messages)

1. தொட்டு பறிக்கலாம் மலரை,
தொடாமல் ரசிக்கலாம் நிலவை,
தொட்டும் தொடாமலும் ரசிப்போம்
இனிய கனவை…!
இனிய இரவு வணக்கம்…

2. இமைமூடி நீ உறங்கு!
உன் விழி வாசலில் நான் காவல் இருப்பேன்.
இந்த இரவு இனிய இரவாகட்டும்..!
இனிய கனவுகளோடு…
இரவு வணக்கம்…!

3. உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும்,
என் இதயத்தில் உன் நினைவுகள்
மலர்ந்து கொண்டே இருக்கும்…!
இனிய இரவு வணக்கம்!!!

4. நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால், உனக்காக என் இதயம் துடிப்பதையும் நிறுத்திவைப்பேன் நீ விழிக்கும்வரை…!
இனிய இரவு வணக்கம்…!!!

ADVERTISEMENT

5. இனிமையாய் தாலாட்டு பாடி….. தென்றல் தவழ்ந்து வர….. இதமான ஒளி தந்து …… நிலவு குளிரூட்ட …… இன்பமான இரவு…… உனக்காக விழித்திருக்க…. இனிய கனவுகளோடு …. உறவே நீ உறங்கு……
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்…..
நீ இருந்தாலும்…… கண் இமைக்கும் நேரத்தில்….. வந்து செல்லும்…..
உன் நினைவுகள் தான்….
நம் உறவின் அடையாளம்…..

6. சோகம் தனிமை தேடும்
தனிமை நினைவைத் தேடும்
நினைவு கனவைத் தேடும்
கனவு உன்னைத் தேடும்
இரவு வணக்கம்!

7. நேரம் இருந்தால் எண்ணை நினைத்துப் பார்….
நேரில் வரவில்லை என்றாலும்
உன் நினைவில் வருவேன்….
அன்புடன் இனிய இரவு வணக்கம்!

8. முடியும் இரவு நம்
கவலைகளுக்கு
முடிவாய் இருக்கட்டும்..
மலரும் காலை
நம் மகிழ்ச்சிக்கு
ஆரம்பமாய்
இருக்கட்டும்..
நல்லிரவு!
இரவு வணக்கம்

ADVERTISEMENT

9. சோகம் தனிமை தேடும்
தனிமை நினைவைத் தேடும்
நினைவு கனவைத் தேடும்
கனவு உன்னைத் தேடும்
இரவு வணக்கம்

10. இரவுகள் நம்மை உறங்க
வைத்தாலும்..
சில நினைவுகள் நம்மை உறங்க
விடுவதில்லை!!
இரவு வணக்கம்

pixabay

ADVERTISEMENT

மனதை கவரும் இரவு வணக்கம் (Inspiring Good Night Messages)

1. ஒரு நாள் உனக்கு
பிடிச்ச மாதிரி
உன் வாழ்க்கை மாறும்..
அது நாளைய கூட இருக்கலாம்
இனிய இரவு வணக்கம்

2. விடியும் என்று விண்ணை நம்பு..
முடியும் என்று உன்னை நம்பு..
இனிய இரவு வணக்கம்

3. தூக்கம் ஒரு பெரிய கள்ளன்,
பாதி வாழ் நாளை கொள்ளையடிக்கிறான்….
இனிய இரவு வணக்கம்….

4. நேற்று வந்த மேகங்கள்
இன்று வானில் கிடையாது….
இன்று வந்த சோகங்கள்
நாளை நம்மை தொடராது…!
இனிய இரவு வணக்கம்!

ADVERTISEMENT

5. மாலை மயங்கிய பொழுது – வந்து
மடியில் விழுந்தது இரவு!
காலை மலராக அரும்ப – இப்போது
இரவு மொட்டின் தவம்!
இனிய இரவில் இன்பக்கனவோடு
இனிய இரவு வணக்கம்!

6. கனவு உன்னைப் போலவே அழகு தான்
உன்னை அதில் காணும் பொழுது!
இனிய இரவு வணக்கங்கள்!

7. இன்று கை கொடுக்க யாரும் இல்லையே என்று கவலைப்படாதே
நாளை உனக்காகக் கை தட்ட உலகமே காத்திருகிறது…
இனிய இரவு வணக்கம்!

8. பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்….
இனி பிறக்க போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்
இரவு வணக்கம்!

ADVERTISEMENT

9. எதிர் பார்த்த அனைத்தையும் ஏமாற்றாமல் தருவது கனவு மட்டுமே!
இன்று உங்கள் ஏமாற்றங்கள் அனைத்தும் தீர்ந்து போக
இரவு நேர வாழ்த்துக்கள்!

10. இரவோடு இணைந்து,…
கனவோடு கலந்து….
நிலவோடு நினைவுகள் தொடரட்டும்….
இனிய இரவு வணக்கம்!

11. நிலாப் பெண்ணே! நீ குளிரை
ஆடையாகக் கொண்டாயோ!
உன் பார்வையில் தேகமெங்கும் சில்லிடுகிறதே!
என் கனவும் உன்னோடு உறைகிறதே!!!
இனிய இரவு வணக்கம்!

காதலன்/கணவன் இரவு வணக்கம்(Good Night Messages For Boy Friend / Husband)

1. அமைதியான இரவு..!
அம்சமான நிலவு..!
அர்ப்பரிக்கும் நட்சத்திரங்கள்..!
அசரவைக்கும் பனிக்காற்றில்,
அசந்து தூங்கும் என்
நண்பனுக்கு..!
இனிய இரவு வணக்கம்..!!

ADVERTISEMENT

2. அன்பே ஒவ்வொரு இரவுகளும் உன் கனவாக
இருப்பதால் தான் என்னவோ, என் இரு விழிகள் உறங்க நினைகிறதோ…
இனிய இரவு வணக்கங்கள்

3. நட்பின் ஆழத்தில் காதலைக் கண்டேன்
காதலின் ஆழத்தில் அன்பைக் கண்டேன்
அன்பின் ஆழத்தில் பாசத்தை கண்டேன்
பாசத்தின் ஆழத்தில் உன்னைக் கண்டேன்
இனிய இரவு வணக்கம்!

4. இமை மூடி உறங்கும் பொழுதும் கதிர் ஒலிகள் கண்கள் கூசும் மனம் மூடி வாழ முயன்றும் சிலர் நினைவுகள் வாசம் வீசும்
இனிய இரவு வணக்கம்

5. நீயும் நானும் நம் காதலைத் தொடர
இந்த இரவு தொடராதா,
வேண்டிக் கொள்கிறேன் இந்த இரவு
விடியாமல் இருக்க!
இரவு வணக்கம்!

ADVERTISEMENT

6. பல மணி நேரம் பேசும் உதடுகளை விட
சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம்!
இரவு வணக்கம்!

7. நிசப்தமான இரவில்
கனவுகளின் இசை போல
தென்றலின் தீண்டலில்
தென்னை மட்டைகள் உரசும் சத்தம்!
உறக்கத்தை வாழ்த்த வண்டுகளின் ரீங்காரத்தில்
வாழ்த்துகள் மிதந்திடும்
உறக்கம் தேடும் விழிகளைத் தேடி!
இரவு வணக்கம்!

8. சந்திரனே உன் வெளிச்சத்தை சற்று குறைத்துக் கொள்
காற்றே நீ வீசும் வேகத்தை சற்று குறைத்துக் கொள்
பூமியே நீ சுற்றும் வேகத்தை சற்று குறைத்துக் கொள்
பூவே நீ திறக்கும் ஓசையினை சற்று குறைத்துக் கொள்
என்னவன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறான்!
இரவு வணக்கம்!

9. ஊரே கண் மூடிய அமைதியான நேரம்
நெஞ்சில் நின்ற இனிமையான தருணங்களை நினைத்து அசை போடும்
இந்த இரவு வேலை
உனக்கு இனிமையானதாக அமையட்டும்!
இனிய இரவு வணக்கம்!

ADVERTISEMENT

10. பாசம் என்பது பேசி வருவது அல்ல
புரிந்துணர்வுகளில் ஒன்றான இரு இதயங்கள்
இணைந்ததால் அமைவது…
இனிய இரவு வணக்கம்!

pixabay

காதலிக்கு / மனைவிக்கு இரவு வணக்கம் (Good Night Messages For Girl friend / Wife)

1. நிலவே திரை விலக்கு
உன் அழகிய முகம் காட்டு
முகில் என்னும் மாயவன் நீ துயில் கொள்ளும் வேளையில்
புகை என்னும் திரை கொண்டு உன் அழகிய முகம் மறைப்பான ‘நிலவே
துயிலாதே – உன் அழகிய முகம் காட்டு – நிலவே தியாதே – உன் அழகிய முகம் காட்டு !
இனிய இரவு வணக்கம்!

ADVERTISEMENT

2. சந்திரனை கண்டு நாணத்தில் சூரியன் மறைய,
விண்மீன்கள் அனைத்தும் ஆனந்தத்தில் மின்ன,
சந்சிரனின் மூச்சு காற்று தென்றல் என வருடி
துயில் கொள்ள வைக்க,
இரவென்ற போர்வை நம் மீது சூழ,
விடியல் எனும் பயணம் கனவாக நாம் தொடர
இனிய இரவு வணக்கங்கள்!

3. பகலவனே சிறிது காத்திரு….
என்னவளின் கனவு மிச்சம் இருக்கு!
இரவு வணக்கம்!

4. தூரிகை கொண்டு வரைந்த ஓவியமோ
காரிகை நேசம் கொள்ளும் காவியமோ
வையகத்தில் உன் போல் யாரழகு
உன் வருகையால் இலக்கணமும் பேரழகு
யாரைத் தேடுகிறாயோ உன்னைத்தான்
அழைத்தேன் வெண்ணிலவே!
இனிய இரவு வணக்கம்!

5. வானத்து தேவதையை நிலா குடையிலே
தேகம் சிலிர்க்கும் குளிர்ந்த காற்றின் இடையே
உறவவிருக்கும் இந்த இரவு பொழுது
என்னவளுக்கு ஒரு சிறந்த உணர்வாக அமையட்டும்!
இனிய இரவு வணக்கம்!

ADVERTISEMENT

6. என் இரவுகள் என்றுமே அழகாகிறது
என் நினைவுகளில் புகுந்து நீ கனவுகளில் வளம் வருவதால்….
என்னவளுக்கு …
இனிய இரவு வணக்கம்!

7. அன்பே ஒவ்வொரு இரவுகளும் உன் கனவாக இருப்பதால் தான்
என்னவோ, என் இரு விழிகள் உறங்க நினைகிறதோ….
இனிய இரவு வணக்கம்!

8. நீ மட்டும் போதும் எனக்கு இந்த இரவுகளில்….
நிலவின் வெளிச்சம் எப்போதும் இருக்கும் நம் கனவுகளில்….
இனிய இரவு வணக்கம்!

9. அன்பே உன்னை காணும் போது பார்க்கும் கண்கள் வெறும் காட்சியே…
கடைசியில் தான் தெரிகிறது
பறிபோனது என் இதயம் அல்லவா என்று….
இனிய இரவு வணக்கம்!

ADVERTISEMENT

10. என் இரவுகளில் உலாவரும் நிலவே நீ தானடி….
என் கனவுகளுக்கு வண்ணங்கள் தீட்டுபவளும் நீ தானடி…
அன்பே…
இனிய இரவு வணக்கம்!

11. நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால், உனக்காக என் இதயம் துடிப்பதையும் நிறுத்திவைப்பேன் நீ விழிக்கும்வரை…!
இனிய இரவு வணக்கம்…!!!

12. பனி துளிகள்
மறைந்து கொண்டு இருக்க…
உன் நினைவுகள் என்னுள்
மலர்ந்து கொண்டு இருக்க…
என்னை நேசிக்கும்
அன்பான உள்ளத்திற்கு
இரவு வணக்கம்…!

சின்னஞ்சிறு குழந்தைக்கு இரவு வணக்கம்(Good Night Messages For Children)

1. இரவின் மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்
உங்கள் மனதும் உறங்கட்டும்
காலையில் புன்கையுடன் மலர
என் இனிய இரவு வணக்கம்..

ADVERTISEMENT

2. நிலவு விண்ணை தொடும் நேரத்தில்…!
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் இனிய வேளையில்…!
தூக்கம் உன் கண்களை தழுவும் முன்…!
என் இனிய இரவு வணக்கம்…!

3. இமைமூடி நீ உறங்கு!
உன் விழி வாசலில் நான் காவல் இருப்பேன்.
என் சிறிய தேவதைக்கு!
இந்த இரவு இனிய இரவாகட்டும்..!
இரவு வணக்கம்…!

4. தொட்டு பறிக்கலாம் மலரை,
தொடாமல் ரசிக்கலாம் நிலவை,
தொட்டும் தொடாமலும் ரசிப்போம் உன்னை!
இனிய இரவு வணக்கம்…

5. அமைதியான இரவு..!
அம்சமான நிலவு..!
அர்ப்பரிக்கும் நட்சத்திரங்கள்..!
அசரவைக்கும் பனிக்காற்றில்,
அசந்து தூங்கும் என்
சின்னஞ்சிறிய தேவதைக்கு ..!
இனிய இரவு வணக்கம்..!!

ADVERTISEMENT

6. நிலவின் ஒளியில் நீ உறங்க…!
விண்மீன் உன்னை கண்டு கண்சிமிட்ட…!
தென்றல் உனக்கு தாலட்டுபாட…!
என் சிறிய தேவதையே நீ கண்ணுறங்கு!!!
இனிய இரவு வணக்கம்…!

7. இனிதாய் தாலாட்ட தென்றல் தவழ்ந்துவர
இதமான ஒளிதந்து நிலவு குளிரூட்ட
இன்பமான இரவு உனக்காக விழித்திருக்க
இனிய கனவுகளோடு நீ தூங்கு!…
இனிய இரவு வணக்கம்!

pixabay

ADVERTISEMENT

ரசிக்க வைக்கும் இரவு வணக்கம் (Funny Good Night Messages)

1. நிலாப் பெண்ணே! நீ குளிரை
ஆடையாகக் கொண்டாயோ!
உன் பார்வையில் தேகமெங்கும் சில்லிடுகிறதே!
என் கனவும் உன்னோடு உறைகிறதே!!!
இனிய இரவு வணக்கம்!!!

2. சில்லென்ற சாரல் காற்றில்
சிலிர்க்குதே மனசு!
மழையின் வருகையை
முன்னறிவிப்பு செய்கின்றன
கார்முகில் கூட்டங்கள்..!
ஜன்னலைத் திறக்கும் போதிலே
முகத்தைத் தழுவி இனிமையளிக்கிறது
இரவின் குளிர்த்தென்றல்…!
மழைத்துளிச் சிந்தும் சத்தம்
எத்தனையோ இசைக்கருவிகளை
எளிதில் வென்று செவி நிரப்புகிறது!!!
இனிய இரவு வணக்கம்..!!

3. இருள் திரையாலும் மறைக்க இயலாத ஒளிர்மதி இவள்..!
இருளின் அழகை இமைகளில் காட்சியாக்குகிறது..!
அழகிய இரவை அமைதியுடன் சேர்த்து ரசித்திடுங்கள்!!!
இனிய இரவு வணக்கம்…!

4. நிலவின் ஒளியில் நீ உறங்க…!
விண்மீன் உன்னை கண்டு கண்சிமிட்ட…!
தென்றல் உனக்கு தாலட்டுபாட…!
என் நண்பனே நீ கண்ணுறங்கு!!!
இனிய இரவு வணக்கம்…!

ADVERTISEMENT

5. அந்தி வானம் சிவக்கையில்…
இவள் ஒளிர்கிறாள்!
அடிவானில் முத்தமிட்டு,
நிலவை வரவேற்க்கும் கதிரவன்!
இரவெனும் கவிதையின்
நாயகி இவள்!
நட்சத்திர பிருந்தாவனத்தில்,
எழில்மிகு அரசி அவள்..!
இனிய இரவு வணக்கம்

6. குளிர் தென்றல் காற்றில்
நிலவு இளைப்பாரும்…
நிலவின் அழகில்
கவிதைகள் வழிந்தோடும்…
அன்பான இதயங்களின் வருகையால்,
கனவுகளால் நிறையும் விழிகள்…
அதிகாலை வரை
இரவை அழகாக்கும் நட்சத்திர விரிப்பு…
இனிய இரவு வணக்கம்..

7. பனி துளிகள்
மறைந்து கொண்டு இருக்க…
உன் நினைவுகள் என்னுள்
மலர்ந்து கொண்டு இருக்க…
என்னை நேசிக்கும்
அன்பான உள்ளத்திற்கு
இரவு வணக்கம்…!

8. இனிதாய் தாலாட்ட தென்றல் தவழ்ந்துவர
இதமான ஒளிதந்து நிலவு குளிரூட்ட
இன்பமான இரவு உனக்காக விழித்திருக்க
இனிய கனவுகளோடு நட்பே நீ தூங்கு!…
இனிய இரவு வணக்கம்!

ADVERTISEMENT

9. விழிகள் உறங்க அழைத்தாலும்
மனங்கள் உறங்க மறுக்கிறதே
இமைகள் மூடிக்கிடந்தாலும்
இதயம் மூடமறுக்கிறதே!
நாளைய வேலைகள் கிடக்கிறதே!
மீண்டும் நாளை சந்திப்போம்!
அதுவரை உடல்கள்
சாயட்டும் படுக்கையில்..
நேசித்த நினைவுகள்
மனதில் ஓடட்டும் விடியும் வரையில்..

10. உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும்,
என் இதயத்தில் உன் நினைவுகள்
மலர்ந்து கொண்டே இருக்கும்…!
இனிய இரவு வணக்கம்!

அழகான இரவு வணக்கம்(Cute Good Night Messages)

1. அழகான இரவு… நிசப்தமான நேரம்… அமைதியான சூழல்.. இனிமையான நினைவுகள்… அன்புடன்
இனிய இரவு வணக்கம்…

2. இரவின் மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்
உங்கள் மனதும் உறங்கட்டும்
காலையில் புன்கையுடன் மலர
என் இனிய இரவு வணக்கம்..

ADVERTISEMENT

3. வீழும் நட்சத்திரங்களாய் இன்றி
வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே..
நல் இரவு வணக்கம்

4. இரவென்னும் கவிதையில்
நிலவும் ☆ நட்சத்திரங்களும்
தேன் சுவை சந்தங்கள்
கவிதையின் பரிசாக இமைகளை தழுவும்
இனிய உறக்கம்
இதமான கனவுகளுடன்
இரவு வணக்கம்

5. விடியும் என்றிருப்போருக்கு…
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு…
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!
நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!
இனிய இரவு வணக்கம்..!!

6. உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும்,
என் இதயத்தில் உன் நினைவுகள்
மலர்ந்து கொண்டே இருக்கும்…!
இனிய இரவு வணக்கம்!!!

ADVERTISEMENT

7. என்றோ ஒரு நாள் நிரந்தரமாக உறங்குவதற்காக நாம் அன்றாடம் எடுக்கும் பயிற்சி தான் தூக்கம்,
அதன் முதலும் முடிவும் நம்மில் யார்க்கும் தெரியாது…
இனிய இரவு வணக்கம்..!!

8. தொட்டு பறிக்கலாம் மலரை,
தொடாமல் ரசிக்கலாம் நிலவை,
தொட்டும் தொடாமலும் ரசிப்போம்
இனிய கனவை…!
இனிய இரவு வணக்கம்…

9. அமைதியான இரவு..!
அம்சமான நிலவு..!
அர்ப்பரிக்கும் நட்சத்திரங்கள்..!
அசரவைக்கும் பனிக்காற்றில்,
அசந்து தூங்கும் என்
நண்பனுக்கு..!
இனிய இரவு வணக்கம்..!!

10. நிலவே நீ பாடு தாலாட்டு
இங்கே ஏராளமானோர்
வீதியில்தான் உறங்குகின்றனர்!!!
இனிய இரவு வணக்கம்(Good Night)

ADVERTISEMENT

pixabay

இனிமையான தாலாட்டு கவிதைகள் (Cute Lullaby Poems)

1. யாரடித்தார் நீ அழுதாய்…?
அடித்தாரைச் சொல்லி அழு
நீரடித்து நீர் விலகாது
நிம்மதியாய் தூங்கி முழி…
ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
அவனாக அழுதான்
அம்மா மடிதேடி…

2. ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூச் செண்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

ADVERTISEMENT

3. ஆராரோ ஆரிராரோ
ஆறு இரண்டும் காவேரி
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!

4. “பண்ணமரும் மென்மொழியார்
பாலகரைத் தாலாட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள் வியப் பெய்தி
விமானத்தோடும் இயும் மிழலையாமே” – திருஞானசம்பந்தர்

5. “மாணிக்கம் கட்டி
வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன் னாற் செய்த
வண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதாந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!” – பெரியாழ்வார்

6. ஆயர்பாடி மாளிகையில்
தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ – கண்ணதாசன்

ADVERTISEMENT

7. சின்னஞ்சிறு கண்மணியே…செல்ல முத்தம் தாராயோ..
உன்னைக் கட்டி அனைத்திடுவேன் கண்ணுறங்கு கண்மணியே..
வேறொருவர் கைப்படவே நான் விடவும் மாட்டேனே
உன்னருகில் நான் இருப்பேன் கண்ணுறங்கு கண்மணியே!
நீயுரங்கும் வேளையிலும் கண்விழித்துக் காப்பேனே
தந்தையுண்டு உன்னருகே அச்சம் இன்றி நீ உறங்கு!

8. புன்னகை பூக்களை
நட்டு போகும்
பூங்காற்றே கண்ணுறங்கு….
தோளில் ஏற்றி
வேடிக்கை காட்டும்
நாட்கள்
தொலைவில் இல்லை
பூ மகளே கண்ணுறங்கு…..
கை பிடித்து
நடை பழக்கும்
நாட்களுக்கும் பஞ்சமில்லை
கண்மணியே கண்ணுறங்கு…..

9. குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
துனையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா
ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஆராரோ

10. ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

ADVERTISEMENT

11. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
அதை மான் குட்டி கேட்டு கண் மூடும்

12. மயிலாடும் சோலையிலே
மாடப்புறா தாலாட்ட..
வண்டாகும் சோலையிலே
வண்ணப்புறா தாலாட்ட…
செண்டாடும் சோலையிலே
சேடியறும் தாலாட்ட…
குயில் கூவும் சோலையிலே
கோடி சனம் தாலாட்ட
கொஞ்சும் கிளி ரஞ்சிதமே
கோமகனே நீயுறங்கு….!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
21 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT