DIY Life Hacks

கடன் பிரச்னைகள் நீங்கி வருமானமும் வசதியும் அதிகரிக்க வேண்டுமா? எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறது எளிய கற்பூரம் !

Deepa Lakshmi  |  May 26, 2019
கடன் பிரச்னைகள் நீங்கி வருமானமும் வசதியும் அதிகரிக்க வேண்டுமா? எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறது எளிய கற்பூரம் !

பெரியவர்கள் சொல்லி கொடுத்தவை எல்லாமே மூட நம்பிக்கைகள் என்ற ஒரு காலம் இப்போது முடிவடைந்து விட்டது. முன்னோர்களின் சொத்துக்களாக அவர்கள் விட்டு சென்ற நம்பிக்கைகளை மீண்டும் முயற்சித்து பார்த்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது தற்போதைய தலைமுறை.

எல்லாமே மூட நம்பிக்கைகள் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. அந்த வகையில் சாஸ்திரங்களை (traditional) புரிந்து அதனை பின்பற்றுவதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் மகாலஷ்மி அனுக்ரகம்.

பிரார்த்தனைகள் பலித்து அதிர்ஷ்டங்களை அள்ள போகும் அந்த ஐந்து ராசியில் உங்கள் ராசி இருக்கா ? சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை !

தீராத கடன் தொல்லைகளால் கவலை வருமானத்துக்கு ஏற்ற செலவுகள் இல்லாமல் போகும் கொடுமை போன்ற பணம் சம்பந்தப்பட்ட அணைத்து சிக்கல்களையும் தீர்க்கிறது மிகவும் மலிவாக கிடைக்க கூடிய கற்பூரம். இதனை சரியாக நீங்கள் பயன்படுத்தினால் கற்பூரம் உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த கூடியது.

வாஸ்து தோஷங்கள் நீங்கும்

கற்பூர பந்துகள் இரண்டை எப்போதும் வீட்டில் திறந்த படி வைத்திருங்கள். ஒன்று சுருங்கி விட்டால் மற்றொன்றை வையுங்கள். இது வீட்டின் எதிர்மறை சக்திகளை விரட்டி விடும்.

இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் உலகின் அரிய மனிதர்களில் நீங்களும் ஒருவர்தான்!

தொடர் பின்னடைவு

தொடர்ந்து உங்கள் வாழ்வில் பின்னடைவு இருந்தால் நீங்கள் என்ன செய்தாலும் தவறாக முடிந்தால் சோதனைகள் அதிகமாக நடந்தால் நீங்கள் இந்த முறையை முயற்சியுங்கள். மிக எளிய முறைதான் ஆனாலும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். நெய்யில் கற்பூரத்தை நனைத்து அதனை காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் ஸ்வாமிக்கு காட்டுங்கள். எந்த விதமான பிரச்னைகள் உங்களுக்கு இருந்தாலும் அது எல்லாமே தீர்ந்து விடும்.

மற்றவரை விடுங்கள், முதலில் நம் மீது நாம் கருணையாக இருக்கிறோமா ?

திருமணம் நடப்பதில் சிரமமா

கொஞ்சம் பச்சரிசி கொஞ்சம் மஞ்சள் இதனுடன் 6 கற்பூரம் மற்றும் 36 கிராம்புகளை சேர்த்து ஒன்றாக கலந்து அருகில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கு படைத்து வழிபடுங்கள். வெகு சீக்கிரம் மாங்கல்ய ப்ராப்தம் சித்திக்கும்.

யாருக்கெல்லாம் தங்கம் ராசியில்லாத உலோகம் ஆகிறது? அவசியம் அறிந்து பயன்படுத்துங்கள்!

அனுமன் வழிபாடு

தினமும் உறங்குமுன்னர் அனுமன் படத்திற்கு ஒரு கற்பூரம் ஏற்றி அவரை கும்பிட்டு உறங்கி வர வேண்டும். இதனால் வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

மஹாஷிவ ராத்திரி மகிமைகள்

செல்வந்தராக

தினமும் உறங்கும் முன்னர் கற்பூரத்துடன் சில கிராம்புகளை சேர்த்து கொளுத்தி அந்த வாசனை வீடெங்கும் பரவ விடவும். இதனால் எதிர்மறை சக்திகள் விலகி தேவதைகள் ஆசிர்வாதம் கிடைக்கும். தடைகள் நீங்குவதால் செல்வந்தர் ஆவதில் ஒரு தடையும் இல்லாமல் போகும்.

சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை – அதிசயமும் அற்புதமும்

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

ஏலியன்கள் வந்து போகும் இமயமலை.. அதிர வைக்கும் மர்மங்கள்.. கைலாஷ் – மானசரோவர் ஒரு தேடல் !

சரியாக நீங்கள் பயன்படுத்தினால் கற்பூரம் உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த கூடியது என்று இந்த youtube பதிவு நமக்கு சொல்கிறது. முயன்று பாருங்கள்.

—                                     

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

 

Read More From DIY Life Hacks