Entertainment

அவருடைய முதல் மனைவியுடன் தான் எங்கள் இரவுகள் கழியும்.. நாகசைதன்யா பற்றி சமந்தா!

Deepa Lakshmi  |  Sep 24, 2019
அவருடைய முதல் மனைவியுடன் தான் எங்கள் இரவுகள் கழியும்.. நாகசைதன்யா பற்றி சமந்தா!

தெலுங்கு சினிமாவின் தற்போதைய ஹாட் ஜோடிகள் சமந்தா மற்றும் நாகசைதன்யா தான். தமிழில் தேர்ந்தேடுக்கப்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமந்தா திடீரென தெலுங்கு பக்கம் தாவினார். அக்கட தேசம் அவரை அன்போடு வரவேற்றது.

அதனால் அங்கேயே தங்கி தன்னுடைய நடிப்பால் அந்த ரசிகர்களை மகிழ்விக்க தொடங்கினார் சமந்தா(samantha). அவர் தெலுங்கு பக்கம் சென்றதற்கு அவருக்கும் நடிகர் சித்தாரத்துக்குமான காதல் முறிவும் ஒரு காரணமே. ஆனாலும் தமிழை மறக்காத பல்லாவர பெண்ணான சமந்தா அவ்வப்போது தமிழ்ப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.                                       

எமிக்கு குழந்தை பிறந்தாச்சு! தாய்மை தருணத்தை முதன்முதலாக குழந்தையோடு பகிர்ந்த எமி ஜாக்சன்!

 

Youtube

Youtube

சமீபத்தில் இவர் நடித்த பேபி திரைப்படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. அதற்கு முன்னர் நாகசைதன்யா உடன் இவர் ஜோடியாக நடித்திருந்த மஜிலி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்காக திருப்பதிக்கு நடந்தே வந்து தம்பதிகள் தங்களுடைய பிரார்த்தனைகளை செலுத்தினர்.

விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சமந்தா (samantha) வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. காரணம் அதன்பின்னரே அவர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். அதே போல இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போது இவர் த்ரிஷா கதாபாத்திரத்திலும் நாகசைதன்யா சிம்பு கதாபாத்திரத்திலும் நடித்தார்கள்.

ஏ மாய சேஸாவே எனப் பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தின் போதுதான் நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் நட்பு ஆரம்பித்து காதலாக பயணிக்க ஆரம்பித்தது. எட்டு வருட காதலுக்கு பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

எனது பாடல் வரிகள் மயானத்தில் இருந்தே பிறக்கின்றன – 96 பாடலாசிரியர் கார்த்திக் நேதா!

 

Youtube

Youtube

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சமந்தா (samantha) நாகசைதன்யா பற்றிய அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை கூறி இருக்கிறார். நாக சைதன்யா வின் முதல் மனைவி சமந்தா இல்லையாம். அவருக்கு இன்னொரு மனைவி இருக்கிறாராம்.

நாகசைதன்யா (nagachaithanya)  உடன் எப்போதும் ஒரு தலையணை இருக்குமாம். அது இல்லாமல் அவர் அவரால் தூங்க முடியாதாம். உறங்கும்போதும் தலையணையை கட்டிபிடித்தபடிதான் உறங்குவாராம். பல நாட்கள் சமந்தா மற்றும் நாகசைதன்யா இடையே இந்த தலையணையும் உடன் இருப்பதால் நாகசைதன்யாவை முத்தமிட கூட முடியாமல் சமந்தா தவித்திருப்பதாக கூறி இருக்கிறார்.

இதைப் பற்றி நிறைய இருந்தாலும் இதுவரை சொன்னதே போதும் என்று நிறுத்திக் கொண்ட சமந்தா நாக சைதன்யா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும் சினிமாவா நாக சைதன்யாவா என்று வரும்போது நிச்சயம் நாகசைதன்யாவைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன் என்றும் தன்னுடைய அன்பின் ஆழம் பற்றி சிலாகித்திருக்கிறார் சமந்தா.

சமந்தா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார், தீபிகா தான் சரியானவர்… பி.வி. சிந்து ஓபன் டாக்!

 

Youtube

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                           

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Entertainment