Health

இயற்கை மருத்துவம் : வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவத்தின் நன்மைகளை அறிவோம்!

Nithya Lakshmi  |  Sep 11, 2019
இயற்கை மருத்துவம் : வயிற்றுக்கு  இதமளிக்கும்  ஓமத் திரவத்தின் நன்மைகளை அறிவோம்!

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நல்ல தூக்கமும் நல்ல உணவும் மிகவும் அவசியம். பசியும் தூக்கமும் இல்லாமல் இருந்தால் உடலில் நோய்கள் வரத் துவங்கி விடும். அதனால் மனமும் பாதிப்பிற்குள்ளாகிறது. எந்த நோயின் ஆரம்பமும் இப்படித்தான் இருக்கிறது. பசியை தூண்டி உணவை எளிதில் ஜீரணிக்க ஓமத்தை பயன்படுத்துங்கள்.ஓமம் சீரக வகையைச் சேர்ந்தது. இதில் பாஸ்பரஸ், கரோட்டின், லிபோக்ளோபின்,தயாமின், மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும், கால்சியம், இரும்புச்சத்து போன்ற கனிமச்சத்துக்களும் இருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைக்கும் இந்த ஓமத் திரவத்தை பயன்படுத்தலாம்.

இயற்கை தந்த ஒரு சிறிய பொருளில் எளிமையாக நம் வீட்டிலேயே தீர்வு காண முடியும் என்பது இதுவரை தெரியாதது நம் அலட்சியம். இனியும் அப்படி இருக்க வேண்டாமே! சரி ஓமத்தைப் பற்றி விளக்கமாகவும், அதன் அளவில்லா நன்மை/பயன்களையும் (benefits) , எப்படி சுலபமாக தயாரிப்பது, எப்படி பயன்படுத்துவது என்றும் பார்ப்போமா.

 

 

 

ஓமத் திரவத்தின் பயன்கள்

1. சுவாச பிரச்சனை

2. கர்ப்பகாலத்தில்

Pixabay

3. மாதவிடாயின் போது

4. வயிற்று பிரச்சனை

Shutterstock

ஓமத் திரவத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது ?

முறை 1

  1. வெறும் கடாயில் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுக்கவும். நன்கு பொரியும்வரை வறுக்கவும். மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். 
  2. பின்பு அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அரை கப் தண்ணீர் கால் கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடுங்கள். 

பெரியவர்கள் ஓமத் திரவத்தை அப்படியே அருந்தலாம், சின்ன குழந்தைகளுக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்த வைக்கலாம்.

முறை 2

ஓம உப்பு கொண்டு எப்படி ஓமத் திரவம் செய்வது என்று பார்ப்போம் 

  1. எல்லா நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும் ஓம உப்பு வாங்கிக்கொள்ளுங்கள்.
  2. 1 லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் ஓம உப்பு ஒரு சிறிய துண்டு பெருங்காய கட்டியும் பயன்படுத்தினால் போதுமானது.
  3. முதலில் ஒரு லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதி வரும் வரை சூடாக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிறிய துண்டு பெருங்காயம் மற்றும் ஒரு கிராம் ஓம உப்பையும் நன்றாக கொதித்த தண்ணீரில் சேர்த்து மூடியால் மூடி வைத்து ஆர விடவும். ஆரிய பின் பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.

இதை ஆறு மாதம் ஆன குழந்தைகளில் இருந்து அனைவருக்கும் கொடுக்கலாம். ஏதேனும்  ஒவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.இப்படி ஓமத் திரவத்தை வீட்டிலேயே செய்வதால், ஆரோக்கியமான திரவமும் கிடைக்கும், எந்த பதனிடுதலும் சேர்க்காமல் செய்து பயன்பெறலாம்.

 

மேலும் படிக்க – பப்பாளி விதையின் பயன்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறைகள்

பட ஆதாரம் – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Health