விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே ‘மெட்ராஸ் ஐ’ எனப்படுகிறது. மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் முதன் முதலாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது.
தற்போது காலநிலை மாற்றத்தால் ‘மெட்ராஸ் ஐ’ (madras eye) எனப்படும் கண் நோய் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது, இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என இங்கு விரிவாக காண்போம்.
அறிகுறிகள்
மெட்ராஸ் ஐ வந்திருப்பதை சில அறிகுறிகள் வைத்து நாம் உறுதி செய்யலாம். இதனை உறுதி செய்தவுடன் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. இந்த பாதிப்புள்ளவர்களுக்கு கண் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் சுரத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
மெட்ராஸ் ஐ – வகைகள்
அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :
தற்போது காற்றில் மாசு பெருகி வருகிறது. அதனால் ஏற்படு அலர்ஜி காரணமாக கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழியவும் கூடும்.
தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!
வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :
ஜலதோசம், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் ஏற்படும். இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இந்த வகை மெட்ராஸ் ஐ ஏற்பட்ட கண்கள் அரிப்புடன் நீர் வழியும்.
பாக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :
பாக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ ஏற்பட்டால் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐயில் காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் உறுத்தல் இருக்கும்.
ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :
இந்த வகையில் கண் உறுத்தலும் வலியும் அதிகம் இருக்கும். அரிப்போ நீர்/சீழ் வடிதலோ இருக்காது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- மெட்ராஸ் ஐ (madras eye) வேகமாகப் பரவக் கூடியது என்பதால், இதுபோன்ற நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் புழங்கும் இடத்திற்கு தேவையிற்றி செல்வதைத் தவிர்க்கலாம்.
- மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கையால் தொட்ட ஏதேனும் ஒன்றை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது.
- அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. மேலும் மெட்ராஸ் ஐ வராவிட்டாலும் நம் கை நேரடியாக கண்ணைத் தொடுவற்கு வழிவிடாமல் கண்ணாடி அணிந்துக் கொள்ளலாம்.
- கையால் கண்ணைத் துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.
- மெட்ராஸ் ஐ வராமல் இருக்க அடிக்கடி சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். கண்களை கழுவ ஃபில்டர் வாட்டரை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் ஃபில்டர் வாட்டரில் பாக்டீரியாக்கள் இருக்காது. ஆனால் அதில் வைரஸ்கள் இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கவனிக்க வேண்டியவைகள்
- மெட்ராஸ் ஐ (madras eye) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட ஒளிரும் திரைகளை பார்க்காமல் இருக்க வேண்டும்.
- கண்களில் தூசி படாமல் பார்த்துகொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது கண்களில் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.
இவர்களால் முடிந்தால், உங்களாலும் முடியும்!பி.சி.ஓ.எஸ் : நீங்கள் அறியாத விஷயங்கள்!
- இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்து கண் எரிச்சல் அல்லது கண் வலி இருந்தால் மருத்துவரை உடனடியாக சென்று பார்க்க வேண்டும். சுய சிகிச்சை வேண்டாம்.
- மெட்ராஸ் ஐ தாக்கம் ஏற்பட்டால் தனிப்பட்ட டவல், கைக்குட்டை, தலையணை உறை, படுக்கை விரிப்பு மற்றும் சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.
- கண்கணில் கான்டாக்ட் லென்ஸ்களை தவிர்ப்பது நல்லது.
- அடிக்கடி கண்ணை தூய நீரை கொண்டு கழுவ வேண்டும். கைகளில் எப்போதும் டவல் அல்லது கைக்குட்டை வைத்திருக்க வேண்டும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!