அம்மா என்றாலே எல்லோருக்கும் அவரவர் அம்மா நினைவுக்கு வருமோ என்னவோ திரைப்படங்களில் அம்மாவாக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு தங்களின் ஆதர்ஷ அம்மா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லோரும் ஏங்குகிற ஒரு இயல்பான பாசத்தாயாக சரண்யா பொன்வண்ணன் (saranya ponvannan) நடித்து தீர்த்திருக்கிறார். இன்னும் நடித்துக் கொண்டும் இருக்கிறார்.
உலக நாயகனுக்கு ஜோடியாக நாயகன் திரைப்படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணனிற்கு மகனாக நடிக்காத நடிகர்களே இல்லை என்னும் அளவிற்கு எல்லா நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்திருக்கிறார்.
கடந்த 1995 ஆண்டில் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்ட சரண்யாவிற்கு இரண்டு பெண்கள் இருக்கின்றனர். பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி இதுதான் சரண்யா பொன்வண்ணன் தம்பதியினரின் மகள்கள் பெயர்கள்.
முதல் மகள் பிரியதர்ஷினி சென்னையின் பிரபல மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். இரண்டாவது மகள் சாந்தினி பன்னிரெண்டாவது வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் அழகிய குடும்ப புகைப்படம்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவிர வேலை இல்லாப் பட்டதாரி திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது இரு மகள்களையும் சரண்யா பொன்வண்ணன் அழைத்து வந்திருந்த புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது. அதனால் மகள்களை சினிமாவில் நடிக்க வைக்கப் போகிறாரா சரண்யா என்கிற கேள்வி எழுந்தது.
ஆனால் அதனை மறுத்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் கண்டிப்பாக நடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். பார்க்க ஹோம்லியாக இருப்பதால் நடித்தால் தமிழ் திரையுலகில் இவர்களுக்கு நல்ல இடம் இருக்கலாம் என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!