நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் மற்ற நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட இவருக்குத்தான் அதிக சம்பளம் தரப்படுகின்றது. இவர் நடித்த படங்கள் பெரிய கதாநாயகன்கள் நடித்த படங்களுக்கு இணையாக தியேட்டர்களில் அதிக நாட்கள் ஓடுகின்றன. மேலும் வசூலும் வாரி குவிக்கின்றன.
தற்போதுள்ள இயக்குனர்கள், நயன்தாராவுக்காகவே கதைகளை உருவாக்கி வருகின்றனர். கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த படத்துக்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கிறது. தற்போது அநேக படத்தில் நயன்தாரா சோலோவாக நடித்து முடித்துள்ளார்.
சில படங்கள் கதாநாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் எடுக்கப்பட்ட படங்கள்தான் ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் ‘கொலையுதிர் காலம்’. நயன்தாரா(nayanthara) அஜீத்துக்கு ஜோடியாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்திருந்தார். அத்துடன் தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து படங்கள் வெனியாகின.
முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!
இந்த நிலையில் இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த நயன்தாரா(nayanthara) விஸ்வாசம் படத்தில் தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகில் இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை என்கின்றனர்.
முன்னணி நடிகர்களான ரஜினி. கமல், அஜீத், விஜய், சூர்யா உள்ளிட்ட ஹீரோக்கள் நடித்த படங்கள் அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. அதுபோல், தற்போது நயன்தாரா(nayanthara) நடித்த படங்களும் அதிகாலை 6 மணி சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகின்றன.
கழுத்தில் ஏற்படும் கருமையை போக்கும் அழகு குறிப்புகள்!
சினிமா இயக்குனர்கள் எல்லோருக்கும் ஒரு கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க வேண்டும் என்பது தான். அந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே இப்போது நிறைவேறி வருகிறது.
அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸிற்கும் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த வேலைகளில் அவர் இருக்கிறார். தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா(nayanthara)நாயகியாக நடிக்கிறார்.
நயன்தாரா(nayanthara) திரைப்படம் என்றால் என்றால் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இதில் கூடுதல் சிறப்பு என்ன வென்றால் வசூல் நாயகர்கர்களான ரஜினி மற்றும் நயன்தாரா(nayanthara) படம் குறித்து தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்திற்காக நயன்தாராவிற்கு(nayanthara) ரூ. 6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் தற்போது அது நயன்தாரா(nayanthara) தான். நயன்தாரா தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைத்தெறி புடைவையை பராமரிப்பது எப்படி?
தர்பார் படத்திற்கு நயன்தாராவிற்கு(nayanthara)6 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பது திரையுலகில் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Celebrity gossip
உங்கள் அழகை பராமரிக்க சில குறிப்புகள்!
Deepa Lakshmi
குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!
Deepa Lakshmi
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..
Deepa Lakshmi
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!
Deepa Lakshmi
செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !
Deepa Lakshmi