Celebrity Weddings

பிரம்மாண்டமான திருமணத்திற்கு பிறகு ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமிளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நேற்று இரவு மும்பையில்!

Nithya Lakshmi  |  Dec 14, 2018
பிரம்மாண்டமான திருமணத்திற்கு பிறகு ஈஷா அம்பானி  மற்றும் ஆனந்த் பிரமிளின்  திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நேற்று இரவு மும்பையில்!

 ஈஷா அம்பானி  மற்றும் ஆனந்த் பிரமிளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நேற்று இரவு மும்பையில் கலை கட்டியது. இவர்களின் திருமணம்  வியக்கவைக்கும் அளவில் ஆன்டிலியா என்னும் முகேஷ் அம்பானி மற்றும் – நீதா அம்பானியின் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு பின் இவர்களின் திருமணத்தின் முதல் வரவேற்பு நிகழ்ச்சிகள் இவர்களின் மும்பை பங்களாவில் தனிப்பட்ட முறையில்  நடைபெற்றது. இந்த பங்களாவின் விலை ரூபாய் 450 கோடி ஆகும்!

அதன் பிறகு,  இவர்களின் இரண்டாவது வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் சங்கீத் விழாக்கள்  ஜியோ பூங்காவில் நேற்று மாலை நடந்தனர்.

உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் எ.ர்.ரஹ்மான் மற்றும் தபலா மேஸ்ட்ரோ  சாஹீர் ஹுசைன் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு –

 

 

 

ஈஷா அம்பானி தனது திருமணத்திற்கு வடிவமைப்பாளர்  அபு ஜானி சந்தீப் க்ஹோஸ்லா வடிவமைத்த லெஹங்காவை அணிந்திருந்தார்.


ஈஷா அம்பானி தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் எம்பிராய்டரி செய்த லெஹெங்காவை தன்னுடைய வரவேற்பு நிகழ்ச்சிக்கு அணிந்திருந்தார். இது வலென்டினோ என்னும்  ஒரு இத்தாலியன் பேஷன் ஹௌசால் வடிவமைக்கப்பட்டது. அவருடைய சிகை அலங்காரம் மற்றும் ஒப்பணத்தை மிக எளிய முறையில் செயதிருந்தார். அவர் தன்னோடைய லெஹெங்காவிற்கு ஏற்ற படி வைரத்தில் ஓர் அட்டிகை அணிந்து நேற்று இரவு ஒரு தேவதை போல் ஜொலித்தார்!!!

முன்னதாக இவர்களின் திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள் இதோ –

 

 

இவர்களுடன் சச்சின் டெண்டுல்கர்,  ஹர்பஜன் சிங்க், ப.சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Read More From Celebrity Weddings