Lifestyle

வாட்ஸ் ஆப் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்! ஆபத்தான நிலையல் குழந்தை

Mohana Priya  |  Jun 7, 2019
வாட்ஸ் ஆப் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்! ஆபத்தான நிலையல் குழந்தை

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் பரிமாறி, செவிலியர்களை(pregnant) வைத்து ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதாகக் குற்றம்சாட்டி அப்பெண்ணின் உறவினர்கள், பிரபல தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்களும் இந்த பிரச்சணைக்கு தங்கள் முழு ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவை, ரத்தின புரியிலுள்ள சம்பத் வீதியில் வசித்து வருபவர் ரங்கராஜ். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா (23). கர்ப்பிணியான இவரை புலியகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி நித்யா பரிசோதனைக்குச் சென்றார். அப்போது அங்குள்ள செவிலியர்கள்(pregnant) உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் அவசரம் அவசரமாக அனுமதிப்பட்ட கர்ப்பிணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சிறிது நேரத்தில் குழந்தையின் உடல் நிலை மோசமாகி வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தற்போது குழந்தைக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இது குறித்து நித்யா கூறியதாவது :

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், செவிலியர்கள்(pregnant) தான் எனக்குப் பிரசவம் பார்த்தனர். அப்போது செவிலியர்(pregnant) புகைப்படம் எடுத்து டாக்டருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார். அவர் சொல்ல சொல்லத் தான் எனக்கு சிகிச்சை அளித்தனர் என்றார்.

ஆனால் இதை மறுத்துள்ள மருத்துவர்கள், பிரசவத்தின் போது குழந்தையின் நஞ்சுக்கொடி பிரிந்ததால் தான் குழந்தையின் இதயத் துடிப்பு குறைவாகத் துடித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் மூலமாக பிரசவம் பார்த்ததாக வெளியான இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை மருத்துவ நிர்வாகம் மருத்துள்ள நிலையில் பிரசவித்த பெண் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். தீவிர விசாரணையில் தான் உண்மை நிலை என்ன வென்று தெரிய வரும். 

விசாரணை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த மருத்துவமனை மற்றும் செவிலியர்கள் மருத்துவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இது போன்ற சம்பவங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டு இருப்பதால் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் உரிமம் முறையாக ரத்து செய்யப்பட்டு செவிலியர்களின் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசாங்கத்தால் செய்யப்படும். குறித்த மருத்துவமனையும் சீல் வைக்கப் படும். இனி அதன் பெயரில் மருத்துவமனை தொடங்கவோ தொடர்ந்து நடத்தவோ முடியாத சூழல் ஏற்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தகுந்த நஸ்ட ஈடு வழங்க மருத்துவமனை முன் வந்தாலும் பிரச்சணை தான் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு முறையான தகுந்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு உயிர்கள் கவன குறைவான செயல்பட்ட மருத்துவமனை மற்றும் நிர்வாகம் மீது தகுந்த நடிவடிக்கை எடுக்கப்படுமா ஏனென்றால் இது போன்ற நிகழ்வுகள் தொடரந்து அடிக்கடி தமிழகத்தில் நடப்பது வாடிக்கையாகி விட்டது என தெரிவித்துள்ளனர். திரைப் படத்தை பார்த்து இது போன்ற செயல்களில் மருத்துவர்கள் செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாவ் தினமும் அசத்தும் மேக்கப் எப்படி போடலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

குளிக்கும் போது இந்த தவறு நடக்கிறது! கட்டாயம் கூந்தல் உதிரும்?

வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle