logo
ADVERTISEMENT
home / அழகு
நீளமான கூந்தலுக்கு இயற்கை சீயக்காய் தூள் – வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம்!

நீளமான கூந்தலுக்கு இயற்கை சீயக்காய் தூள் – வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம்!

சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக ஆசிய துணைக்கண்டத்தில் புகழ்பெற்று விளங்கும் இது மற்ற கண்டங்களிலும் கூட பரவியுள்ளது. 

அசாசியா கோன்சின்னா மரத்தின் காயில் இருந்து செய்யப்படும் சீயக்காய் கூந்தலுக்கு சிறந்த க்ளின்ஸராக விளங்கும். எங்கு வேண்டுமானாலும் வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக்கூடியவை தான் சீயக்காய் தூள். இது மிகவும் மலிவான ஒன்றும் கூட. ஆனால் இவற்றை கடையில் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே செய்து பயன்படுத்துவது நல்லது.

twitter

ADVERTISEMENT

சீயக்காய் – நன்மைகள்

  • சீகைக்காயில் (shikakai) நிறைந்துள்ள சத்து பொருட்கள் நம் தலைமுடியின் வேர்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. 
  • சீகைக்காய் கொண்டு முடியை அலசி வந்தால் கூந்தல் அடர்த்தியையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. அதனால் தான் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனையும், வழுக்கைத் தலை பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

அடர்ந்த மேக்கப்பை எளிதில் நீக்கும் ஜோஜோபா எண்ணெய் மேக்கப் ரிமூவர்! தயாரிப்பது எப்படி?

  • கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது. 
  • சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம்.
  • மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் சீகைக்காயில் இருப்பதால் இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
  • முடியின் நிறத்தை தக்க வைக்கும் கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும்.

twitter

  • சீயக்காய் பயன்படுத்துவதால் தலைச்சருமத்தை வறட்சியாக்காது. இது இயற்கையிலே நறுமணம் மிக்கது என்பதால்  வாசனையாக இருக்கும். 
  • கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். 
  • சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
  • கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் (shikakai) உதவும். மேலும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்குகிறது. 

பேஷியலின் வகைகள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பேஷியல் செய்யும் வழிமுறைகள்!

ADVERTISEMENT
  • சீயக்காய் இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

twitter

இப்போது  வீட்டிலேயே சீயக்காய் (shikakai) தூள் அரைக்க என்னனென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.  

தேவையான பொருட்கள் : 

ADVERTISEMENT

சீயக்காய் – 1 கிலோ,
செம்பருத்திப்பூ- 50 பூ,
வெந்தயம் – 100 கிராம்,
பூலாங்கிழங்கு  – 100 கிராம்,
எலுமிச்சை தோல் – 25,
பயத்தம் பருப்பு – 1/4 கிலோ,
காய்ந்த நெல்லி – 100 கிராம்,
கார்போக அரிசி – 100 கிராம்,
பூவந்திக் கொட்டை – 100 கிராம்,
செம்பருத்தி பூ, இலை – 50 கிராம்,
ஆவாரம்பூ – 100 கிராம்,
மரிக்கொழுந்து – 100 கிராம். 

மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் 2 நாட்கள் வைத்து நன்றாக காய்ந்த பின் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும்.  

த்ரிஷாவின் அசத்தலான பாரம்பரிய லுக்கை பெறுவதற்கான 10 படிகள் மற்றும் யுத்திகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

31 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT