logo
ADVERTISEMENT
home / Bigg Boss
தர்ஷன் வெளியேற இது தான் உண்மையான காரணமா? பிரபலம் வெளியிட்ட டிவிட்… தர்ஷனின் பதில்!

தர்ஷன் வெளியேற இது தான் உண்மையான காரணமா? பிரபலம் வெளியிட்ட டிவிட்… தர்ஷனின் பதில்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் 3-வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி இறுதி வாரத்திற்கு வந்துவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் நிலையில் அதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெறியேற்றப்பட்டு விட்டுவிட்டார். இது ரசிகர்களுக்கும், சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டு வருகிறது. 

twitter

ADVERTISEMENT

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களும் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று ஆணித்தரமாக நம்பி வந்தார்கள். ஆனால் தர்ஷன் எப்படி வெளியேறினார் என்பதுதான் பலருக்கும் மிகப் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், விஜய் டிவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

தர்ஷன் வெளியேறியதால் ரெட் லைட் விஜய் டிவி என சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள். தர்ஷன் வெளியேற்றத்தின் காரணம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் அவர்கள் முக்கிய காரணமாக சொல்வது தர்ஷன் எப்படியும் காப்பாற்றப்பட்டு விடுவார் என்ற நம்பிக்கையில் ஷெரினுக்கு வாக்களித்ததாக கூறி வருகிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்த முன்னாள் போட்டியாளரின் கணவர் : வனிதா பதிலடி!

ஷெரினுக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வரும் என்று எதிர்பார்த்த பல்வேறு ரசிகர்கள் ஷேரினை காப்பாற்ற வாக்களித்துள்ளார்கள். ஆனால் அதுவே  தர்ஷனுக்கு குறைவான வாக்குகள் பதிவாக வழிவகுத்துள்ளது இதனால் ரசிகர்கள் பலரும் தற்போது ஷெரினுக்கு வாக்களித்ததை எண்ணி புலம்பி வருகிறார்கள்.

ADVERTISEMENT

twitter

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் நீங்கள்தான் டைட்டில் வின்னர் என்று தர்ஷனுக்கு பல்வேறு ரசிகர்களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷனுக்கு விரைவில் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் தர்ஷன் வெளியேற்றம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் காயத்ரி ரகுராம் தர்ஷன் வெளியேற்றம் மனமுடைய வைத்து விட்டது என கூறியுள்ளார். வாக்குகளில் பின்தங்கிய போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டவர்கள் ஸ்ட்ராங் போட்டியாளரை மறந்துவிட்டார்கள். அவருக்கு மற்றவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நினைத்து இப்படி செய்திருக்கலாம். 

ADVERTISEMENT

பிக் பாஸ் மோசடி – நடிகை பளார், ஷெரினுக்காக தர்ஷன்! கவினை காப்பாற்ற தயங்கும் லாஷ்லியா!

ஆனது ஆகட்டும் தற்போது சரியான வெற்றியாளரையாவது தேர்ந்தெடுப்போம் என கூறியுள்ளார். மேலும் என்னுடைய சாய்ஸ் முகேன் அல்லது சாண்டி என கூறியுள்ளார். மேலும் பிரபல நடிகையும் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளருமான நடிகை ஆர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் ரொம்ப கொண்டாடும் போதே நினைத்தேன் மக்களால் போற்றப்படுபவர்கள் பிக்பாஸால் எலிமினேட் செய்யப்படுவார்கள். 

கண்டிப்பாக நீங்கள் தான் வெற்றியாளர் சகோதரா, நீங்கள் உங்கள் நாட்டின் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தர்ஷன் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, தர்ஷனின் வெளியேற்றம் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். ஆனால் முகேன் மற்றும் தர்ஷன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் அவர்களுடன் விளம்பர படங்களில் நடிக்க காத்திருப்பதாக கூறியுள்ளார்.  

இவரது கருத்து தர்ஷன் மற்றும் முகென் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் விளம்பர வாய்ப்புகள் தான் கிடைக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றம் குறித்து சேரன் ட்வீட் செய்துள்ளார். அதில் ஆகச்சிறந்த உழைப்பைக் கொடுத்து விளையாடிய தம்பி தர்ஷன் வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது. 

ADVERTISEMENT

100 சதவீதம் பிக் பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத் தகுதியானவர்.அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்.. அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தர்சனின் வெளியேற்றத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையிலும் இந்த விஷயத்துக்காக கலங்கிவிடவில்லை தர்ஷன். 

தற்போது வீட்டில் நண்பர்களுடன்  கொண்டாடி வருகிறார் காதலி சனமும்  அவருடன் இருக்கிறார் அவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை சனம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் வெல்கம் பேக் தர்ஷன் என்று சொல்வது சரியாக இருக்காது. நீ கடைசி வரை தங்கி வெற்றி பெற்றிருக்க வேண்டியவன். ஆனால் நீ மக்களின் மனங்களை வென்றுவிட்டாய் என்று என்னால் கூற முடியும். 

இதை நான் உன்னிடம் சொன்னபோது நீ நம்பவில்லை.தற்போதாவது நம்புவாய் என்று நினைக்கிறேன். மேலும் இது நியாயம் இல்லை பிக்பாஸ். அவர் கடைசி வரை இருந்து ஜெயித்துவிட்டு வந்திருக்கவேண்டியவர் என பதிவிட்டுள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷன் அவரது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமக்கு பழக்கம் இல்லாதவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.

அதுபோல தான் நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி. இந்த 98 நாட்களும் என்னை உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டியதற்கு நன்றி. இது தான் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. உங்களை விரைவில் சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு அவரது ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர் இதனிடையே முகென்,சாண்டி, லாஸ்லியா, ஷெரின் தான் பைனல்ஸ் போட்டியாளர்கள். இவர்களில் யார் டைட்டில் அடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் எகிறி கொண்டிருக்கிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

29 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT