மீன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக தான் இருக்கும். யாருக்கு தான் மீன் பிடிக்காது. ஒரே வகை மீனை சாப்பிட்டு நம்மில் அனேகருக்கு மிகவும் போர் அடித்திருக்கும். அப்படி நினைப்பவர்கள் இந்த கனவாய்(cuttle) மீனை ட்ரை பண்ணி பார்க்கலாம். இது மிகவும் எளிமையானதும் சீக்கிரம் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். பயமின்றி சாப்பிடலாம். குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள்.
இஞ்சி விழுது – 2 மேசைகரண்டி
பூண்டு விழுது – 2 மேசைகரண்டி
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 15
தக்காளிப் பழம் – 1
எண்ணெய் – 2 மேசைகரண்டி
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
- அடுத்து அதில் ஊறவைத்த கனவாய்(cuttle) மீன் கலவையை போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்). 20 நிமிடங்களில் கனவாய்(cuttle) வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த்தன்மை முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து டிரையாக, உதிரியாக வரும் போது கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.
- சுவையான கனவாய்(cuttle) மீன் பொரியல் ரெடி.
குறிப்பு: இதனை ஒரு வார விடுமுறையில், சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடுங்கள், காரணம் சிலருக்கு கனவாய்(cuttle) சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படுமாம்.
வெயிலால் ஏற்படும் வரண்ட சருமம் சரி செய்வதற்கான எளிய முறைகள்!
பெஃப் தாமுவின் கனவாய்(cuttle)ரெசிபி
உள்குத்து’ என்ற படத்தில் மீனவர்கள் சங்கத் தலைவரா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாகர்கோவிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் படபிடிப்பு நடக்குது. ஒரு நாள் படபிடிப்பின் போது, அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய்(cuttle)மீன் ஃபிரை, கிரேவி, கருவாடு, மாசி பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க. இது எனக்கு புதுஅனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃபிரெஷ் மீன் சாப்பிடும் போது அவ்வளவு டேஸ்டா இருந்தது.
கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே அலாதியானது. அவர்களிடம் அதை எப்படி சமைச்சாங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இதில் ‘கனவாய்(cuttle) மீன்’ ஃபிரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதை ‘கடம்பா மீனுன்னும் சொல்லுவாங்க. இந்த ரெசிப்பியைத் தான் தற்போது உங்களோடு பகிர்ந்துக் கொள்ள போகிறேன்.
என்னுடைய தவறு தான்! அன்னையர் தினத்தன்று உறுக்கமான பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி
கனவாய்(cuttle) மீன் வறுவல்
தேவையானவை :
கனவாய்(cuttle)மீன் – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்னவெங்காயம் – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – ஒரு குழிகரண்டி அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1 (சாறு எடுக்கவும்)
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்
செய்முறை:
மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
பெண்களின் மார்பகம் பற்றி ஆண்கள் கூறும் கருத்துக்கள்!
கனவாய்(cuttle)மீன் குழம்பு
தேவையான பொருள்கள்
கனவாய்(cuttle) மீன் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2ஸ்பூன்
மிளகுத்தூள் – கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
மல்லிதுர்ள் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- கனவாய்(cuttle) மீனை சுத்தம் செய்து பலமுறை கழுவுங்கள்.
- கழுவியதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வையுங்கள்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- பிறகு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கி வரும்போது அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக் கிளரி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- பின் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கனவாய்(cuttle) மீனை சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
- கணவாய் மீன் வெந்து தொக்கு பதத்துக்கு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான கனவாய்(cuttle)மீன் குழம்பு ரெடி. வார விடுமுறை மற்றும் வார நாட்களில் கூட இதை நீங்கள் செய்யலாம்.
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo